பாலியல் தொல்லை - தலைமறைவான சிவசங்கர் பாபா கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

பாலியல் தொல்லை - தலைமறைவான சிவசங்கர் பாபா கைது

சென்னை, ஜூன்16- சென் னையை அடுத்த கேளம் பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன் னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மாநில குழந் தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வா கிகள் 6 பேரும் நேரில் விசா ரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, சென் னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாக ராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜ ராகினர்.

ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராக வில்லை. சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனு மதிக் கப்பட்டிருப் பதாக  கூறி அவருக்கு பதிலாக வழக் குரைஞர் ஆஜரானார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலி யல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் காவல்துறையினர் சிவசங்கர் பாபா மீது போஸ்கோ உள் ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன் தினம் (13.6.2021) வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.அய்.டி விசாரணைக்கு மாற்றப்பட் டது.

இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசி அய்டி காவல்துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத் தது.   சிபி சிஅய்டி கண்காணிப் பாளர் குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர்   விரைந்தனர்.

இந்நிலையில் இன்று டில்லியில் சிவசங்கர் பாபா தமிழ்நாடு காவல்துறையின ரால்  கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment