கடவுள் சக்தி எங்கே? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

கடவுள் சக்தி எங்கே?

கோவில் குடமுழுக்கு விழாவில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழப்பு

புதுச்சேரி, ஜூன் 16- புதுச்சேரியில் வில்லியனூர் அருகே கோவில் குடமுழுக்கு விழாவில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழந்தார். புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. யாகசாலை மண்டபங்கள் அமைத்து கடந்த 12ஆம் தேதி அன்று இரவில் பூஜைகள்   நடந்தன. அப்போது தமிழகத்தில் உள்ள குமலம் பகுதியை சேர்ந்த அர்ச்சகர் பூபாலன் (வயது 27) என்பவர்  ஒலிவாங்கி   மூலம் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து   அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூபாலன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment