புதிய உருமாற்ற கரோனா வைரஸ் டெல்டா பிளஸ் : மருத்துவர்கள் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

புதிய உருமாற்ற கரோனா வைரஸ் டெல்டா பிளஸ் : மருத்துவர்கள் எச்சரிக்கை

புதுடில்லி,ஜூன்16- டில்லியில் கரோனாவின் 2ஆவது அலை தாக்கம் குறைந்துள்ளது. இதனால் மாநில அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சந்தைகள், விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நெருக்கமாக கூடி வரத் தொடங்கி உள்ளனர். ஆனால், மக்கள் கரோனா கால வழிகாட்டும் விதி முறைகளை பின்பற்றா விட்டால், 2ஆவது அலையை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று மருத்து வர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுபற்றி டில்லி அப் பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சுரன்ஜித் சாட்டர்ஜி கூறும்போது, “கரோனா கால பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால், மீறல்கள் ஏற்பட்டால், விதி முறைகளை கடுமையாக அமல்படுத்தாவிட்டால் எங்களுக்கு மீண்டும் பிரச் சினைதான்என குறிப் பிட்டார்.

மேலும்மக்கள் முகக் கவசம் அணியாமல், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல், சட்டம் ஒழுங்கை அமல்படுத்து வோர் அவர்களுக்கு அப ராதம் விதிக்கவில்லை என் றால், நிச்சயமாக பிரச்சினை ஏற்படும். இரண்டாவது அலையை விட மோசமான நிலை ஏற்படும்என்றும் அவர் எச்சரித்தார்.

இந்நிலையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளடெல்டா பிளஸ்உருமாற்ற கரோனா வைரஸ் 3ஆவது அலைக்கு அடித்தளமிடுமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இது, தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கும் வல்லமை கொண் டது என நிபுணர்கள் எச் சரித்துள்ளனர்.

இந்தியாவில் 2ஆவது அலை வெகுவாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் 3ஆவது அலை ஏற்பட வாய்ப்பிருப் பதாக நிபுணர்கள் எச்சரித் துள்ளனர். கடந்த மார்ச் மாதம், ஏஒய்.1 எனப்படும் இந்த புதிய உருமாற்ற வகை கரோனா வைரசை ஆய்வா ளர்கள் கண்டறிந்தனர். இந்த வைரசின் ஸ்பைக் புரதம் கே417என் என்ற உருமாற்ற வகையை சேர்ந் ததாக அடையாள ப்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஸ்பைக் புரதம், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண் டலத்தை தாண்டி பாதிக்கக் கூடியது என கூறப்படு கின்றது.

இதனால், தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால், தற் போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்ப தாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment