கருநாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் தாக்கு
பெங்களூரு, அக்.22 பிரதமர் மோடி தனது தோல்விகளை மறைக்க, மக்களை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம் என்று கருநாடக முன் னாள்முதல்வரும், காங்கிரஸ் தலை வருமான சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை யொன்றை சித்தராமையா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பு அதிகரிக்க மக்களின் அலட்சியம் காரணம் அல்ல, மத்திய- மாநில அரசுகளின் தோல்வியே காரணம். இதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி முதலில் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
ஆனால், நாட்டு மக்களுக்கு அறிவுரை என்ற பெயரில் தனது தோல்விகளை மோடி மூடிமறைக்கப் பார்க்கிறார்.கரோனா நெருக்கடி காலத்தில் மத்திய அரசு அறிவித்த
ரூ. 20 லட்சம் கோடிதொகுப்பு நிதி உதவி யார்-யாருக்கு வழங்கப்பட் டுள்ளது, பிஎம்- கேர்ஸ் நிதியத்திற்கு வந்த நன்கொடை எவ்வளவு, என்னென்ன பணிகளுக்கு அது செலவு செய்யப்பட்டுள்ளது, என் பதையெல்லாம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரி விக்காதது ஏன்?ஒரு பிரதமர், கரோனா வைரசை ஒழிக்க அறிவியல் பூர்வ மான காரணங்களை கூறுவதை விட்டு, ஜோதிடர்களைப் போல பேசிக் கொண்டிருந்தால், மக்கள் முட்டாள்கள் ஆகாமல் வேறு என்ன ஆவார்கள்?
இவ்வாறு சித்தராமையா விமர் சித்துள்ளார்.
No comments:
Post a Comment