“நீட்” நுழைவுத் தேர்வு முடிவுகளில் ஏன் இத்தனை குளறுபடிகள் - குழப்பங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

“நீட்” நுழைவுத் தேர்வு முடிவுகளில் ஏன் இத்தனை குளறுபடிகள் - குழப்பங்கள்

பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும்



திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!


சென்னை, அக். 18-- நேற்று (17.-10.-2020) திராவிட முன்னேற் றக் கழகத் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக் கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி யின் விவரம் பின்வருமாறு:


நீட் தேர்வு முடிவுகள் முத லில் தவறாக வெளியிடப் பட்டு, தேசியத் தேர்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப் பான்மை  மீண்டும் நிரூபண மாகி இருக்கிறது. மாணவ-மாணவியரின் எதிர்காலத்தை ஏதோ கிள்ளுக் கீரையாக எண்ணி, சடு குடு விளையா டுகிறது அந்தத் தேர்வு முகமை. மத்திய பா.ஜ.க. அர சும் இதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் புரியவில்லை.


சில மாநிலங்களில் நீட் தேர்வை எழுதியவர்களை விட வும், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நாடுமுழுவதும் மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான சர்ச்சை நெடு கிலும் வலுத்ததை அடுத்து, தேசியத் தேர்வு முகமை, முதலில் வெளியிட்ட தேர்வு முடிவுகளை இணைய தளத் தில் இருந்து நீக்கிவிட்டு, மீண் டும் புதிதாகத் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.


தற்போது ஓஎம்ஆர் (ளிவிஸி) தாளை வைத்து ஆய்வு செய்த தில்,  மதிப்பெண்கள் குறைந்த தாக ஏராளமான மாணவர் கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துக் கொண்டிருக்கி றார்கள். நாடு தழுவிய அள வில் நடத்தப்படும் ஒரு நுழை வுத் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்? குழப்பங்கள்? என்ன காரணம்? யார் யார் இதன் பின்னணியில் இருக் கிறார்கள்? அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண் டாமா ?


தமிழ்நாட்டில் நீட் தேர் வுக்கு விண்ணப்பித்தவர்களில் 23,468 பேர் தேர்வே எழுத வில்லை. தேர்வு எழுதிய 99,610 பேரில் 57,215 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள் ளார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வை விட 2,570 பேர் குறைவாகவே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆகவே நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு - குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் தேர்வு என்பது இந்த ஆண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.


அகில இந்திய அளவில் நீட் தேர்வினை 79 சதவீதம் பேர் ஆங்கில மொழியிலேயே எழுதியிருக்கிறார்கள். மத்திய அரசு வம்படியாகத் திணித்து வரும் இந்தி மொழியில் 12.80 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியிருக்கிறார்கள். அந்த அளவுக்கே இந்திக்கு விருப்பமும், வரவேற்பும்!


ஆகவே, போட்டித் தேர் வுகளில் இந்தித் திணிப்பை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்பதற்கு இதை விட வேறு ஆதாரமோ, அடிப் படையோ தேவையில்லை.


தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத் துவக் கனவு சிதைக்கப்படுவ தைத் தாங்க முடியாமல், நேற்றைய தினம் நீட் தேர்வு வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு கிருபாகரன் அவர் களே கண்கலங்கியிருக்கிறார். இதுதான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளி மாண வர்களின் உணர்வாகும்.


ஆகவே, கிராமப்புற மாண வர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத் துவக் கனவைச் சிதைத்து அழிக்கும் நீட் தேர்வை மத் திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மீண் டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment