பெருநகர சென்னை மாநகராட்சியின் இராகவேந்திரா மூலிகைப் பூங்கா திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

பெருநகர சென்னை மாநகராட்சியின் இராகவேந்திரா மூலிகைப் பூங்கா திறப்பு


சென்னை, அக்.21 தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைக்கிணங்கவும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கே.எஸ். இரவிச்சந்திரன் அவர்களின்  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சென்னை சூளை ஏ.பி. சாலையில் புதிய சீரமைக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இராகவேந்திரா மூலிகைப் பூங்கா திறப்பு விழா 19.10.2020 அன்று மாலை நடைபெற்றது.


இவ்விழாவிற்கு 58ஆவது வட்ட தி.மு.கழகச் செயலாளர் வெ. மருதன் 58 (அ) வட்ட தி.மு. கழகச் செயலாளர்


ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்த, எழும்பூர் தெற்கு பகுதி தி.மு. கழக செயலாளர் ஜெ. விஜயகுமார், எழும்பூர் வடக்கு பகுதி தி.மு.கழக செயலாளர் சொ. வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.கழக  செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு அவர்களின் தலைமையில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் .தயாநிதிமாறன் அவர்கள் 'இராகவேந்திரா மூலிகைப் பூங்கா"வை திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி மேனாள் மாமன்ற உறுப்பினர் து. காளிமுத்து நன்றி கூறினார்.


இந்நிகழ்வில் புரசை அன்புச்செல்வன், கோ. ஏகப்பன், புனிதவதி எத்திராசன், கோ. மணி, எஸ். மணிமுடி, வே. உமாகாந்த், ஜி. தாமோதரன், பி.டி. பிரின்ஸ்பால், ராஜேஸ்வரி சிறீதர்,


கே. கோகுல் இ. மொய்தீன், நா. பாலு, பி.சி. சம்பத், மு. முரளிதரன் தேவந்தி, அ. மனோகர், சி.சேகர், ஆர்.எம். ரங்கநாதன்,


வி. அபாய், மு. கமலக்கண்ணன், எல்,. சுந்தர்ராஜன், மு. துலுக் காணம், டால்பின் எஸ். அரி, எஸ். பாலாஜி, க. வினோத், ஆர். ஜெய்சங்கர், எம். வெற்றிவேலன், அ. நிர்மலாதேவி, எம். புனிதா மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment