தந்தை பெரியார் பலமுறை வற்புறுத்தியும், சட்டப்படி ஜாதிகள் ஒழிக்கப்படவே இல்லை.
சிறுபான்மை ஆதிக்கவாதிகள், பார்ப்பனர்கள் எதிர்த் தாலும், நம் ஆசிரியர் அவர்கள் வற்புறுத்தியபடி, இதன் பொருட்டு, மத்திய பா.ஜ.க. அரசு தாமதிக்காமல் அனைத்து மாநில அரசுகளும், கட்சிகளும், சமூக அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும் ஒருங்கிணைந்து செயல் படும்படியான பல வகை முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டியது இன்றியமையாதது. சிறுபான்மை ஆதிக்கவாதி கள், பார்ப்பனர்கள் எதிர்க்கக் கூடுமாகையால், நம் ஆசிரியர் தெளிவுபடுத்தியவாறு, தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி விரைவில் செயலாற்றுவது அவசியமாகிறது.
கருநாடகத்தில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலேயே ஜாதி வாரி விவரங்கள் திரட்டப்பட்டன. ஆனால், சிறபான்மை ஜாதியினரின் தடையால், அவற்றின் விவரம் வெளியிட பா.ஜ.க. அரசு இன்றும் மறுத்து வருகிறதே!
தங்கள் அன்பன்,
பு.ர.கஜபதி, கருநாடக மாநிலத் திராவிடர்
கழகத் துணைத் தலைவர், பெங்களூரு
No comments:
Post a Comment