மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சுகாதாரத் துறை செயலாளர் தகவல்



சென்னை,அக்.15, மழைக்கால நோய்கள் பரவாமல்தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


உலக கை கழுவும் தினத்தை யொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நேற்று (14.10.2020) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. செவிலியர் மாணவிகள் கைகளைக் கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகுசெய்தியாளர் களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:


உலக கை கழுவும் தினம் 2008-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படு கிறது. முன்பைவிட கை கழுவும் அவசியத்தை தற்போது நாம் உணர்ந்துள்ளோம்.


கை கழுவுதல், முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப் பிடிப்பதால் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். வட கிழக்கு பருவமழைதொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோய்கள் பரவாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் அரசு சார்பில் மேற்கொள் ளப்பட்டுள்ளது.


3 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. விழாக் காலங்களில் பொது மக்கள் கூட்டமாக கூடும் இடங்கள் மற்றும் நோய் பரவும் பகுதிகள் கண்டறியப் பட்டு, தொடர்புடைய ஆட்சியர்கள் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு நோய்தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.


கரோனா தொற்று இறப்பு சத வீதத்தை குறைக்க இரவு நேரங்களில் நோயாளிகளை மருத்துவமனை களில் அனுமதிக்க நடமாடும் மருத் துவ வாகன திட்டம் இந்த மருத் துவமனையில் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment