சன்னாபுரம் வழக்குரைஞர் சு.விஜயகுமார் இல்ல மண விழா - கழகத் தலைவர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

சன்னாபுரம் வழக்குரைஞர் சு.விஜயகுமார் இல்ல மண விழா - கழகத் தலைவர் வாழ்த்துரை


திருநாகேசுவரம், அக். 21- திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர், சன் னாபுரம் வழக்குரைஞர் சு.விஜய குமார் சகோதரி மகள் கி.பிரியதர்சினி- - கு.தமிழ்மணி, ஆகியோரது வாழ்க்கை துணை ஏற்பு விழாவினை 18.10.2020, ஞாயிறு காலை 9.30 மணியளவில் திருநாகேஸ்வரம், எஸ்எஸ்ஆர் திரு மண மண்டபத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையேற்று நடத்தி வைத்தார்.


மண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  மேலான காணொலி வாழ்த்துரை ஒளிபரப்பட்டது. வாழ்த்துரை  சிறப்பாகவும் ஆசிரியர் அவர்களை நேரிலே பார்த்தது போன்ற புத் துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும்  அனைவருக்கும் தந்தது. ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரைக்கு பின் மணமக்கள் மற்றும் விழாவிற்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுந்து நின்று கரொவொலி எழுப்பியதோடு  நெருக்கடியான காலகட்டத்தில் இயக்க எதிரிகளை எதிர்கொள்வ தோடு மட்டுமில்லாமல் இயக்க குடும் பங்களையும்  அரவணைக்கும் ஒப்பற்ற தலைவர்  ஆசிரியர் என பாராட்டி மகிழ்ந்து நன்றி தெரிவித்தனர். வருகை தந்த தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


மேலும் மாவட்ட தலைவர் கு.நிம் மதி, மாவட்ட செயலாளர் சு.துரை ராஜ், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் மு.ந.கணேசன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் வை.பூவானந்தம், ஆகியோர் முன்னிலையேற்றும்,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் தி.இராஜப்பா, திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய செய லாளர் ந.முருகானந்தம், குடந்தை பெருநகர செயலாளர் பீ.இரமேஷ், மாவட்ட இளைஞரனி செயலாளர்/பொதுக்குழு உறுப்பினர் க.சிவக் குமார், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அ.சங்கர், ஒன் றிய து.செயலாளர் குணசேகரன் ஆகி யோர் வாழ்விணையர்களை வாழ்த்தி யும் உரையாற்றினார்கள்.


தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட மகளிரணி து.செயலாளர் மு.திரிபுரசுந்தரி, பவுண்ட்ரீகபுரம் முருகேசன், நகர  தலைவர் அ.மொட் டையன்,நகர செயலாளர் வீ.திராவிட பாலு, நகர து.தலைவர் த.அம்பிகாபதி, நகர து.செயலாளர் அ.சின்னையா, மாவட்ட வழக்குரைஞரணி பொறுப் பாளர்கள் இரா. அழகியமணாளன், சா.சக்திவேல், நகர கழக பொறுப் பாளர்கள் ந.சிவக்குமார், குருமூர்த்தி, சரவணன் ஆகியோர்  விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குடும்பத்தினர்கள்  சார்பாக மண விழாவிற்கு வருகை தந்தவர்களை  நகர பொறுப்பாளர் சு.சாமிநாதன் வரவேற்றும், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார் நன்றியும் கூறினர்.


No comments:

Post a Comment