ஜெய்ப்பூர், அக். 21- தேசிய தேர்வு முகமை வெளியிட்ட நீட் தேர்வு முடிவில் தாழ்த்தப் பட்டோர் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தோல்வி அடைந்ததாக குளறுபடி நடந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சவாய் மதோப்பூர் மாவட் டத்தில் உள்ள கங்காபூரை சேர்ந்தவர் மிருதுல் ராவத் (17). இவர் நீட் தேர்வில் 720க்கு 329 மதிப்பெண் பெற் றதாக தேர்வு முடிவு வெளி யானது. இதனால் அதிக மதிப்பெண்ணை எதிர்பார்த்த மிருதுல் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மறுமதிப்பீடு செய்யக்கோரி தேசியத் தேர்வு முகமையிடம் விண்ணப்பித் தார். மறுமதிப்பீடு செய்த பின்னர் அவர் 720க்கு 650 மதிப்பெண்கள் பெற்றிருப் பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மதிப்பெண் அடிப் படையில் அவர் தாழ்த்தப்பட் டோர் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள் ளார் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு முடிவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்து வரு கின்றன. இதன்காரணமாக தேசிய தேர்வு முகமை திருத் தப்பட்ட பட்டியலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், முதலிடம் பிடிக்க வேண்டிய மாண வனை தோல்வி அடைந்ததாக தவறான தேர்வு முடிவை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டிருப்பது மாண வர்கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment