உண்மையைப் பேசாதீர்கள்!
சென்னை சாய் அகடிப் என்ற மாணவர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்ணுக்கு 475 மதிப்பெண்ணும், பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு 516 மதிப்பெண்ணும் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அந்த மாணவர் 'நீட்' தேர்வில் பூஜ்ஜியமாம் - மாணவனும், பெற்றோரும் அதிர்ச்சி: - 'தமிழ் இந்து'
உஷ்.... இப்படி எல்லாம் சொல்லக் கூடாது - சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!
ஓ, ஓபிசியா?
அய்.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 286 ஆம் இடத்தைப் பெற்ற மாற்றுத் திறனாளி பூரணசுந்தரிக்கு அய்.ஏ.எஸ். பணி தராமல் - அய்.ஆர்.எஸ். ஒதுக்கீடு.
ஓ! நீங்கள் ஓபிசியா - அதுது£ன்!
சட்டம்- ஒழுங்கு அபாரம்!
கட்சிக் கொடி ஏற்றும் விவகாரம்! ஆளும் கட்சியினர் விளாத்திக்குளத்தில் சாலை மறியல்.
சட்டம் - ஒழுங்கு பேஷ்! பேஷ்!!
புதிய கண்டுபிடிப்பு
அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை தி.மு.க. நடத்துகிறது - தி.மு.க. பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இது அடையாளம்: - அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.
நல்ல கண்டுபிடிப்பு. ஆகவே, அரசியல் கட்சிகளே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தாதீர்!
பயிரை மேயும் வேலி!
கஞ்சா கடத்தல் வழக்கில் போலீஸ்காரர் கைது.
வேலியே பயிரை மேய்கிறது!
No comments:
Post a Comment