செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

செய்தியும், சிந்தனையும்....!

உண்மையைப் பேசாதீர்கள்!


சென்னை சாய் அகடிப் என்ற மாணவர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்ணுக்கு 475 மதிப்பெண்ணும், பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு 516 மதிப்பெண்ணும் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அந்த மாணவர் 'நீட்' தேர்வில் பூஜ்ஜியமாம் - மாணவனும், பெற்றோரும் அதிர்ச்சி: - 'தமிழ் இந்து'


உஷ்.... இப்படி எல்லாம் சொல்லக் கூடாது - சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!


ஓ, ஓபிசியா?


அய்.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 286 ஆம் இடத்தைப் பெற்ற மாற்றுத் திறனாளி பூரணசுந்தரிக்கு அய்.ஏ.எஸ். பணி தராமல் - அய்.ஆர்.எஸ். ஒதுக்கீடு.


ஓ! நீங்கள் ஓபிசியா - அதுது£ன்!


சட்டம்- ஒழுங்கு அபாரம்!


கட்சிக் கொடி ஏற்றும் விவகாரம்! ஆளும் கட்சியினர் விளாத்திக்குளத்தில் சாலை மறியல்.


சட்டம் - ஒழுங்கு பேஷ்! பேஷ்!!


புதிய கண்டுபிடிப்பு


அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை தி.மு.க. நடத்துகிறது - தி.மு.க. பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இது அடையாளம்: - அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.


நல்ல கண்டுபிடிப்பு. ஆகவே, அரசியல் கட்சிகளே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தாதீர்!


பயிரை மேயும் வேலி!


கஞ்சா கடத்தல் வழக்கில் போலீஸ்காரர் கைது.


வேலியே பயிரை மேய்கிறது!


No comments:

Post a Comment