கழக பொறுப்பாளர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

கழக பொறுப்பாளர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு


திருவாரூர், அக். 22- கடந்த ஏப்ரல் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டித்து, 8.4.2020 அன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மோகன் தலைமையில் தி.க, தி,மு.க உள்ளிட்ட அனைத்து கட்சி தோழர்கள் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள்  கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது. 


ஜனநாயக முறையில் நடைபெற்ற இதில், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையை மறித்தார்கள் என்று மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட துணைத் தலைவர் அருண் காந்தி, முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ், பெரியார் பற்றாளரும், தமிழக காவிரி விவசாய சங்க மாநில இணை செயலாளருமான வரதராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் ஆசாத் ஆகியோர் மீது மட்டும் திருவாரூர் நகர காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, 19.10.2020 அன்று இரவு சம்மன் வழங்கினர். அதன்படி நேற்றுறு (21.10.2020) காலை 10.00 மணிக்கு பொய்குற்றம் சாட்டப்பட்ட அய்வரும் திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு 05.11.2020 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment