மறைந்த பழனி மாவட்டச் செயலாளர் நா.நல்லதம்பி இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

மறைந்த பழனி மாவட்டச் செயலாளர் நா.நல்லதம்பி இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆறுதல்


பழனி, அக். 22- சாலை விபத்தில்  சிக்கி தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் மற்றும் நண் பர்களின் பேருதவியால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் சிகிச்சை பலனின்றி அண் மையில் மறைவுற்ற பழனி கழக மாவட்ட செயலாளர் நா. நல்லத்தம்பி இல்லத்திற்கு (அய்ந்துமருகால்) 19-.10. 2020 அன்று கழக பொறுப்பாளர் களுடன் சென்ற கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நல்ல தம்பி அவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.


நல்லதம்பி அவர்களின் வாழ்விணையர் ந.திலகவதி, மகன் இன்பத்தமிழன், மகள் யாழினி மற்றும் உறவினர்களி டம் ஆறுதல் தெரிவித்தார்.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தனர், பல நண்பர்கள் உதவியும் எனது கணவரை காப்பாற்ற முடிய வில்லை என அவரது வாழ் விணையர் கன்கலங்கினார்.


ஆசிரியர் அய்யா அவர் கள் தொலைபேசியில் ஆறு தல் தெரிவித்தது எங்களுக்கு மிகவும் ஆறுதல் அளித்தது என தெரிவித்தனர்.


தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஜாதி மறுப்பு திருமண செய்து கொண் டோம். எனது கனவர் மறை வால் மிகப் பெரிய பாதிப்பில் உள்ளோம்.


எங்கள் குழந்தைகளையும் பெரியார் கொள்கையில், ஆசிரியர் வழியில் சிறந்த கல் வியை வழங்கி உருவாக்கு வோம் என தெரிவித்தார்.


பழனி மாவட்டத் தலை வர் பெ.இரணியன், மாவட்ட ப.க தலைவர் ஆசிரியர் திராவிடச் செல்வன், பொதுக் குழு உறுப்பினர் தாராபுரம் ந.சக்திவேல், பழனி நகர செயலாளர் ராதா, மண்டல இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.அருண்குமார், தாரா புரம் சின்னப்பதாஸ், சுப்ர மணியன், வழக்குரைஞர் செல் லத்துரை, ஓவியர் பத்பந்தன், கருப்புசாமி, முருகன், கணபதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


No comments:

Post a Comment