அறிந்து கொள்வோமா - ‘ANOSOGNOSIA‘ பற்றி...! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 19, 2020

அறிந்து கொள்வோமா - ‘ANOSOGNOSIA‘ பற்றி...! (1)


பல அரிய தகவல்களை கைத்தொலை பேசி கட்செவி - ‘வாட்ஸ் அப்' மூலம் அனுப்பி உதவிடுவார் அருமை டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள்.


சில நாட்களுக்கு முன் அனுப்பி வைத்த ஆங்கிலத்தில் ஆன இந்த அரிய செய்தி களை உங்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ லாம் என்று விரும்பி இதை எழுதுகிறேன்.


தற்காலிக மறதித்தன்மை (Temporary forgetfulness) என்பது பற்றி பிரெஞ்சுப் பேராசிரியர் புருனோ துபே என்பவர், (பாரீ சில் உள்ள ஒரு மருத்துவமனை - இன்ஸ்டி டியூட் ஆப் மெமெரி அண்ட் அல்ஷைமர்ஸ் நோய் (Institute IMMA, AP-HP Pitie-Salpetriere Hospital) கூறிடும் சில தகவல்களும், கருத்துரைகளும் இதோ:


நம்பிக்கையூட்டும் தன்மையால், அவரது இத்தகவல்கள் நமக்குப் பயன் அளிக்கக் கூடும்!



யாராவது தங்களது நினைவு வன்மையை, ஞாபக சக்தியைப் பற்றி சிந்திக்கிறார்கள் - கவலைப்படுகிறார்கள் என்றால் அவர்க ளுக்கு மறதி நோய் என்று அழை க்கப்படும் அல்ஷைமர்ஸ்‘ (Alzheimer's) இல்லை என்றே நாம் வைத்துக் கொள்ளலாம்! (எவ் வளவு நம்பிக்கையூட்டக்கூடிய அரிய தக வல் இவை. மேலே செல்லுவோமா?


சிலர் அடிக்கடி கவலைப்பட்டுக் கூறுவ துண்டு.



  1. "இப்போதெல்லாம் நான் நெருக்கமான குடும்பத்தவர்களின் பெயர்களைக் கூட மறந்துவிடுகிறேன்; ‘சட்'டென்று நினைவுக்கு வரமாட்டேங்கிறது!"


"சில பொருள்களை எங்கே வைத்தேன் என்பது கூட உடனே ‘விர்'ன்னு ஞாபகத்திற்கு வர மறுக்கிறது!"


60 வயதுள்ளவர்களும், மேற்பட்டவர் களும் இப்படி நினைவு இழத்தல்பற்றி அடிக் கடி குறை சொல்லிக் கொள்ளுகிறார்கள்!


மூளையில் அந்தத் தகவல்கள் எப்போதும் உள்ளன. அதை 'பிராசஸ்' செய்து உடனடி யாக நினைத்தவுடன் வெளியே கொணர மறுக்கும் நிலைதான் மேற்காட்டிய தற்காலிக மறதி - நினைவுத்தப்பல்.


ANOSOGNOSIA  என்பது 60 வய துக்கு மேற்பட்ட பலரும் இந்த தற்காலிக நினைவு இழத்தல் - மறதியை பெற்றுள்ளது என்பது வயதினால் ஏற்பட்ட ஒன்றே தவிர, இது ஒரு நோய் அல்ல (மறதி நோய் என்று பயப்பட வேண்டாம்).


பொதுவாக அடிக்கடி இதுமாதிரி ஏற்படும் அனுபவங்கள் - நிகழ்வுகள் என்ன தெரி யுமா?


சரி - சில நபர்களின் பெயர்களை மறத்தல். (எனக்கே கூட கூட்ட நிகழ்ச்சிகளின் துவக் கத்தில் மற்றவர்களை விளிக்கும் போது மிகவும் பழகியவர்கள் பெயர்கூட சிற்சில சமயங்களில் 'சட்'டென்று நினைவுக்கு வராமல் சில மணித்துளிகள் தடுமாற்றத்திற்குப் பிறகே கூட வருவது எப்போதாவது உண்டு).



  1. சில அறைக்குள் நம் வீட்டுக்குள்ளேயே ஏதோ ஒரு எண்ணத்தோடு நுழைவது - எதற்கு இங்கே வந்தோம் என்று புரியாது குழம்புவது.

  2. சில திரைப்படங்கள், தலைப்புகள், நடித்த நடிகர், நடிகைகள் பெயர்களை மறந்து விடுதல்.

  3. மூக்கு கண்ணாடியை, சாவிக் கொத்தை எந்த இடத்தில் வைத்தோம் என்று தேடுதல் - இவை மறதி நோயின் அறிகுறி என்று அச்சப்பட வேண்டாம்!


60 வயதுக்குப்பிறகு இது சர்வ சாதாரண மாக அன்றாட வாழ்வில் பலருக்கும் நடப்பது தான்!


வயது மூப்பின் விளைவுகளான இவை சகஜமானவை தான்!


(தொடரும்)


No comments:

Post a Comment