ஆட்சியர்களிடம்  பணம் இருந்தால் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

ஆட்சியர்களிடம்  பணம் இருந்தால் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா

ஆட்சியர்களிடம்  பணம் இருந்தால் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா?: சித்தராமையா கேள்வி



பெங்களூரு, அக்.20  ஆட்சியர் களிடம் பணம் இருந்தால் மக் களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? என்றும், இதுவரை யாருக்காவது வெள்ள நிவாரணம் கிடைத்துள்ளதா என்றும் சித்த ராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.


கருநாடக சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட் டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-


எடியூரப்பாவின் அரசு கமிஷன் அரசு. இங்கு லஞ்சம் கொடுக்காமல் ஒரு பணியும் நடப்பது இல்லை. காங்கிரஸ் தொகுதிகளின் வளர்ச்சி பணி களுக்கு நிதி ஒதுக்கவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் இந்த அரசு நிறுத்திவிட்டது. சமுதாய பவன் கட்டிடங்ளின் கட்டுமான பணிகள் நிதி இல்லாமல் பாதியில் நின்றுள்ளன. 21-ஆம் தேதி (நாளை) வான்வழியாக வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதாக முதல் அமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். வெள்ளம் இருக்கும் போது வான்வழியாக ஆய்வு செய்வது சரி.


வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ள பகுதிகளில் சாலை வழியாக பயணம் செய்து, நிவாரண முகாம் களில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டால் தான் அவர்களின் பிரச்சினை என்ன என்று தெரியும். விமானத்தில் பாதிப்புகளை பார்வையிட்டால், மக்களின் பிரச்சினை புரியுமா?. கடந்த 2019ஆ-ம் ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டது. மீண்டும் தற்போது வெள்ளம் ஏற்பட் டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி நேரில் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிடவில்லை. அவருக்கு கர்நாடகத்தின் மீது அக்கறை இல்லையா?. இவ்வாறு சித்த ராமையா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment