மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீட்டில்; ஆளுநர் முடிவெடுக்கும் வரை  மருத்துவ கலந்தாய்வு நடக்காது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 17, 2020

மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீட்டில்; ஆளுநர் முடிவெடுக்கும் வரை  மருத்துவ கலந்தாய்வு நடக்காது

உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி



மதுரை, அக். 17- மருத்துவ இடங் களில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன் அதனாலேயே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக் காதா? என எண்ணுவதாக தெரிவித்தார்.


இது தொடர்பான வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் பாக நேற்று (16.10.2020) விசார ணைக்கு வந்தது.


அப்போது, அரசுத் தலைமை வழக்குரைஞர், ”மருத்துவ இடங் களில் அரசுப்பள்ளி மாணவர்க ளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனை யில் உள்ளது. ஆளுநர் சட்ட மசோதா குறித்து 1. ஏற்கலாம், 2. நிராகரிக்கலாம், 3.பரிசீலிக்குமாறு கூறலாம். 4. திருப்பி அனுப்பலாம். இந்த 4 முடிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுக்கலாம்" எனத் தெரிவித்தார்.


அதற்கு நீதிபதிகள், "இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அதிகாரிகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு,  விரைவாக முடிவெடுக்க வேண் டும். தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஜல்லிக் கட்டிற்கு பின்பாக ஒன்றிணைந்து இந்த சட்ட மசோதாவை ஆதரித் திருக்கிறார்கள். உணவில்லாத, சமூக ரீதியாக பின்தங்கிய ஏழை களே பெரும்பாலும் அரசுப்பள்ளி களில் பயில்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தொடர்ந்து இவ்வாறு வாடட்டும்" என விட்டுவிடலாமா? எனக் கேள்வி எழுப்பினர்.


முறையாகக் குழு அமைத்து குழுவின் பரிந்துரையில் சட்ட மசோதா நிறைவேற்றியும், தாமதம் ஆகி, ஏழை மாணவர்கள் பாதிக் கப்படலாமா? எனவும் கேள்வி எழுப்பினர்.


அதற்கு அரசுத் தலைமை வழக் குரைஞர், "சட்டமசோதா ஆளுந ரின் பரிசீலனையில் உள்ளது. நீதி மன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது. காலக்கெடுவையும் விதிக்க இயலாது" எனத் தெரிவித்தார்.


அதற்கு நீதிபதிகள்," முடிவெ டுக்க 1 மாத காலம் போதாதா? முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், சட்ட மசோதா தொடர்பான முடிவே வெளியாகி என்ன பயன்? எடுக்கும் முடிவு என்னவாயினும், முன்பா கவே அதனைத் தெரிவிக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பினர். அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப் பிக்கவே முன்வரவில்லை என்ப தன் மூலம் உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிப்பிற் குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவருகிறது. மேலும், உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதி கரிக்கும் என ஊடகங்கள் மூலம் தெரியவருகிறது. 4, 5 லட்சம் ரூபாய் செலவழித்து, தனியார் பயிற்சி மய்யங்களில் பயிற்சி பெற இயலாத நிலையில் உள்ளனர். கிராமப்புற மாணவர்களின் வருத் தங்களும், வேதனைகளும் அளவி டற்கரியது எனக்கூறி கண் கலங்கிய நீதிபதி அதன் காரணமாகவே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா? என எண்ணுவதாக தெரிவித்தார்.


இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஒற்றை இலக்கங்களில் மாணவர் கள் மருத்துவ இடங்களைப் பெறு வது அதிக வருத்தமளிக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குழுவின் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக் கப்படும் என நம்புகிறது.


நீட் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் மேலும் ஒரு ஆண்டை அரசுப்பள்ளி மாணவர் கள் இழக்க வேண்டாம் என எண் ணுகிறது எனத் தெரிவித்தனர்.


தொடர்ந்து, நீட் தேர்வு முடி வுகளுக்குப் பின்னர், எப்போது கலந்தாய்வு, மருத்துவக்கல்லூரி இடங்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை மதியம் 1 மணிக்கு ஒத்திவைத்தனர்.


இதனையடுத்து, சட்ட மசோதா தொடர்பான ஆளுநரின் முடிவு வெளிவரும்வரை, தமிழக மருத்துவ இடங்கள், கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடாது என தமிழக அரசுத்தரப்பில் உறுதியளித்துள்ளது.


No comments:

Post a Comment