சென்னை, அக். 22- தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3,086 பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப் பட்டு 6,50,856 குணமடைந் துள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 10,780 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமி ழகத்தில் நேற்று மட்டும் 81,782 கரோனா பரிசோத னைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 3,086 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென் னையில் 845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தமி ழகத்தில் இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 4,301 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள் ளனர். மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 856 பேர் குண மடைந்துள்ளனர். 35 ஆயி ரத்து 480 பேர் மருத்துவம னையில் சிகிச்சை பெறுகின்ற னர். நேற்று ஒரேநாளில் மட் டும் 39 பேர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். சென் னையில் 11 பேர். இதுவரை தமிழகத்தில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment