தெலுங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

தெலுங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை


அய்தராபாத், அக். 20- தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால் வரலாறு காணாதவெள்ளப் பெருக்கு ஏற்பட் டுள்ளது. தெலுங்கானா தலைநகர் அய்தராபாத்தில் 117 ஆண்டு களுக்கு பிறகு கடும் வெள்ளம் சூழ்ந்தது.


ஏராளமான மக்கள் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர்மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு ள்ளனர். இரு மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர்.காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலுங் கானா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.தெலுங் கானா தலைநகர் அய்தராபாத் நகரம் முழுவதும் இடைவிடாது அதி கன மழை பெய்தது.இதனால் சாலைகள், தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. நகரில் சுமார் 1,500 குடி யிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாககாட்சி அளிக் கின்றன. ஏராளமா னோர் வீடு, உடை மைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.


கன மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழி கின்றன. போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளதால், ஹைதராபாத் நக ருக்கு வெளியே பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின் றன. சில இடங்களில் பேருந்துகள், லாரிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ள தால் ரயில் போக்கு வரத்தும் நிறுத் தப்பட்டது.சாலை, தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள் ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்புப்பணிகளில் தீவிர மாக ஈடுபட்டுள்ள னர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியிருந்தவர் களை மீட்டு பாதுகாப்பான இடங் களில் தங்க வைத்துள்ளனர். அவர்க ளுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.நகரில் ஒரேநாளில் 32 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.


கடந்த 3 நாட்களில் 119 செ.மீ. மழை பெய்துள்ளது. ஹைதராபாத் தில் 1903-ம் ஆண்டுஇதேபோன்று பலத்த மழை பெய்ததாக கூறப்படு கிறது. 117 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ள சேதம், மீட்புப் பணிகள்குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளு டன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர் ஆலோசனை நடத்தினார். பின்னர் சந்திரசேகர் ராவ், ‘‘அய்தராபாத்தில் இவ்வளவு கனமழை 100 ஆண்டுகளில் பெய்தது இல்லை. இதனால் அய்தரா பாத் நகரமே மிக மோசமாக பாதிக் கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அய்த ராபாத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க முடிவு செய் துள்ளோம். ஓரளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும். முழுமையாக சேத மடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.’’ எனக் கூறினார்.


No comments:

Post a Comment