லக்னோ,ஜூலை7, விகாஸ் துபே என்ற இந்துத்துவ ஆதரவாளர் போர்வையில் இயங்கும் சமூக விரோதி, காவல்துறையினரை தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்து 13 காவலர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுள்ளான். திரைப்படப் படங்களில் வருவதுபோன்ற இந்த கொடூர நிகழ்வில் 8 காவல் துறை யினர் நிகழ்விடத்திலேயே மரண மடைந்தனர், அய்வர் மருத்துவ மனையில் இறந்தனர். கொலை செய்தவர் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர் மற்றும் பார்ப்பனர் ஆகையால் உத்தரப்பிரதேச இந்துத்துவ அமைப்புகள் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்து சுரக் ஷா வாகினி என்ற அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதியுள்ளதாவது, காவல் துறையினர் விகாஸ் துபே சுட்டதில் இறந்து போனார்கள். இதில் அதிர்ச்சி அடைய ஒன்றுமே இல்லை, காவல்துறையினர் எதற் காக சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களுக்கான பணியில் மோத லின் போது மரணமும் ஏற்படும் என்று தெரியும். அவர்கள் அரசின் அடிமைப் பணியாளர்கள். அப்படி இருக்க காவல்துறையினர் செத்துப் போனார்கள் என்று ஊடகத்தினர் தொடர்ந்து செய்திகளைச் சொல்லி கொண்டு வருகின்றனர். விகாஸ் துபே ஒன்றும் அனாதை அல்ல அவர் பிராமணன், பரசுராமனின் வம்சம் என்று எழுதியுள்ளார். இது போன்று பல இந்து அமைப்புகள் தொடர்ந்து விகாஸ் துபேவிற்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Tuesday, July 7, 2020
Home
இந்தியா
உ.பி.யில் காவல்துறையினரைக் கொன்று குவித்த குற்றவாளி பார்ப்பனருக்கு இந்து அமைப்புகள் ஆதரவாம்
உ.பி.யில் காவல்துறையினரைக் கொன்று குவித்த குற்றவாளி பார்ப்பனருக்கு இந்து அமைப்புகள் ஆதரவாம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment