மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றும் தொடர் அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றும் தொடர் அவலம்

விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் நால்வர் உயிரிழப்பு



தூத்துக்குடி, ஜூலை 3- தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65) என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக, நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி (41), பாலா (20), மணி கண்டன் மகன் இசக்கிராஜா, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (19) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.


கழிவுநீர் தொட்டியில் இருந்த தண் ணீரை முதலில் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்தனர். தண்ணீர் முழுவதும் எடுக் கப்பட்ட பிறகு தொட்டியின் அடியில் படிந்து இருந்த கழிவுகளை அகற்றுவ தற்காக தொட்டியின் மேல் உள்ள சிறிய பாதை மூலம் இசக்கிராஜா, தினேஷ் ஆகியோர் உள்ளே இறங்கினார்கள். அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் விஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தார்கள். இதை பார்த்து தொட்டியின் மேல் நின்ற பாலா அவர்களை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கினார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதை கவனித்த பாண்டி 3 பேரையும் காப்பாற் றுவதற்கு உள்ளே இறங்கினார். ஆனால், அவரும் விஷவாயு தாக்கி மயங்கினார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த 4 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதைத்தொடர்ந்து சிறீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.


அதன்பேரில், தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட் டிக்குள் மயங்கி கிடந்தவர்கள் ஒவ்வொரு வராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் 4 பேருமே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.


இதுகுறித்து உடனடியாக தட்டப் பாறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த காவல்துறையினர், பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோத னைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடி அருகே வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள்  நால்வர் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment