சூத்திரர்களை என்றுமே சூத்திரனாகவே வைத்திருக்க வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

சூத்திரர்களை என்றுமே சூத்திரனாகவே வைத்திருக்க வேண்டும்!

இஸ்கான் நிறுவன்ர் சொன்னது என்ன?



அமெரிக்காவில் மென்பொருள் துறையில் நிலவும் ஜாதிவெறி குறித்து கனன்று கொண்டிருந்த நெருப்பு புகையத் தொடங்கியிருக்கிறது. சிஸ்கோ என்ற நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தச் சார்ந்த ஒரு பணியாளரை ஜாதி ரீதியாக பாகுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு முதல்முறையாக வழக்காகியிருக்கிறது. இதற்கான விதை இப்போதல்ல.. எப்போதோ விதைக்கப்பட்டுவிட்டது.


பார்ப்பனர்கள் இப்போது மட்டுமல்ல... எப்போதும் அப்படித் தான். இந்தியாவில் மட்டுமல்ல.. அமெரிக்காவிலும் அப்படித்தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. அயல்நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் பார்ப்பனியத்தைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட இஸ்கான் அமைப்பு, இந்துக்களுக்கான அமைப்பு என்று தன்னைப் பம்மாத்தாகக் காட்டிக் கொள்கிறது. ஆனால், அதனுள் இருக்கும் பார்ப்பனிய விஷம் எவ்வளவு கொடியது என்பதற்கு இந்த திமிர்ப் பேச்சு ஒரு சான்று! இந்துமதம் என்ற போர்வை போர்த்தி வர்ணாஸ்ரம முறையைப் புதுப்பிப்பதே அவர்களின் நோக்கம்.


அபய் சந்திரவிந்த பக்திவேதாந்த என்ற சுஆமி பிரபுபாதா (இஸ்கான் அமைப்பை உருவாக்கியவர்) வர்ணாஸ்ரம முறையை மீண்டும் தீவிரமாக கொண்டுவருவது பற்றி தன்னுடைய பக்தர்களுடன் 14.2.1977 அன்று அமெரிக்காவில் பேசியதன் தமிழாக்கம்:


“சூத்திரன் திறமையானவனாக இருந்தால், அவன் சுத்த சூத்திரன் கிடையாது அவனுள் பிராமணன் இருக்கிறான்


போதையில் இருக்கும் மன்மதனுக்கு எல்லாமே அழகாகத்தான் தெரியும்! அதனால் தான், அவன் சிந்தனை கெட்டு இருக்கும் போது சூத்திரர்களை, பிரம்மாவின் பாதத்தில் பிறக்க வைத்தான்,


உண்மையில் வெள்ளையானவர்கள் அழகானவர்கள், கருப்பானவர்கள் அசிங்கமான மனிதர்கள் வடிவில் பிறந்து விட்டார்கள்.


வேதநாகரிகத்தில் அனைத்துமே செழித்து இருந்தது, அவரவர் செயலை, அவரவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கிறது? அமெரிக்காவில் விலை உயர்ந்த கார்களில், கருப்பினமக்கள் பயணிக்கின்றனர். இது எப்படி ஒரு மூன்றாம் தர அடிமைகள் இவ்வாறு செய்கிறார்கள்? ஏன்?


 சூத்திரர்களை என்றுமே சூத்திரனாகவே வைத்திருக்கவேண்டும், அவர்களுக்கு என்று பகவான் வகுத்ததை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கவேண்டும், ஆனால் இன்று என்ன நடக்கிறது? அமெரிக்காவில் கருப்பர்கள் செல்வந்தர்கள் ஆகிவிட்டார்கள். பணம் அவர்களை மேலும் முட்டாளாக்கி விட்டது, அவர்களுக்கு பணம் கிடைக்காவிட்டால் அவர்கள் முரடர்களாக மாறிவிடுவார்கள்


 வெள்ளை அன்னம் என்றாவது கருப்பு அன்னத்தோடு வாழ்கிறதா? கொக்குகள் எங்காவது காகத்தோடு பறக்கிறதா, இயற்கை தெளிவாக பகவானின் சட்ட திட்டத்தோடு பயணிக்கிறது,


 அதுபோல் தான் இந்தியாவில் வேதம் செழிக்கவேண்டும், கல்லூரிகளில், பள்ளிகளில், ஏன் வீடுகளில் கூட வர்ணாஸ்ரம முறை கற்பிக்கப்படவேண்டும், நான்கு வர்ணங்கள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும்


 மனிதர்கள் தங்களைத் தாங்களாகவே ஏமாற்றிக்கொண்டு உள்ளனர். சூத்திரன் ராஜாவாக முடியாது, கருப்பினத்தவர்கள் சூத்திரர்கள்! ஆகவே அவர்களுக்குத் தலைமைப்பதவி கூடாது,


 இந்தியாவில் பிராமணர்களும், சத்திரியர்களும், வைசியர்களும் நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பார்கள். ஆனால் சூத்திரன், கருப்பு நிறத்தில் தான் இருப்பான்., பிரம்மன் கருப்பு நிறத்தில் ஏன் பிறக்கவைக்கவேண்டும் என்பதை அலசிப்பார்க்கவேண்டும்! பிராமணர் கருப்பு நிறத்தில் பிறந்தால், அவரை சூத்திரன் என்று கூறமுடியாது, அதே நேரத்தில் ஒரு சூத்திரன் வெள்ளையாகப் பிறந்துவிட்டாலும், அவனை பிராமணனாக கருத முடியாது, இது பகவான் கூறியது, நான் கூறவில்லை.


ஒரு சூத்திரன் புத்திசாலியாக இருந்தால், அவன் சுத்த சூத்திரன் இல்லை என்று பொருள்! சூத்திரர்களுக்கு மூளை இல்லை. அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள்! அங்கே இருந்த கருப்பர்கள் சூத்திரர்கள்! அதனால் தான், அவர்களால் அந்த நாட்டை உருவாக்க முடியவில்லை. ஆனால் அய்ரோப்பியர்கள் வந்த பிறகு, அவர்கள் அமெரிக்காவை உருவாக்கினார்கள். அவர்கள் அங்குள்ள மக்களை அடிமையாக்கினார்கள்


சூத்திரர்களை நாம் எப்போதும் அடிமைகளாகவே வைத்திருக்கவேண்டும். அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ! அவர்களுக்கு ஒரு போதும் சுதந்திர உணர்வை நாம் தந்துவிடக்கூடாது, அமெரிக்காவைப் பாருங்கள்! அங்கு கருப்பர்கள் அடிமைகளாக இருக்கும் வரை, அமெரிக்கா கட்டுப்பாடுகளோடு நன்கு வளர்ந்து வந்தது, அவர்கள் சம உரிமை கொடுத்த பிறகு, அங்கு கருப்பர்கள் பதட்டமானச் சூழலை உருவாக்கிவிட்டார்கள்.


அதே போல் தான் சூத்திரர்களையும் நாம், அடிமைகளாக வைக்கவேண்டும், சூத்திரர்களுக்கு உணவு மற்றும் உடைகளை கொடுக்கவேண்டும். அவர்கள் நம்மை அண்டியே இருக்கவேண்டும் ஒருபோதும் சூத்திரர்களுக்குத் திருப்திபடும் அளவும் எதுவுமே கொடுத்துவிடக்கூடாது.”


இந்து மதம் உலகெங்கும் போனால் ஜாதியும், தீண்டாமையும் உலக மயமாகும் என்றார் அம்பேத்கர்!


அப்படியே உண்மை தானே!


- சரவணா ராஜேந்திரன்


 


No comments:

Post a Comment