கரோனா தொற்றுக்கு பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரை தமிழக மருத்துவர் ஆய்வு அறிக்கை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

கரோனா தொற்றுக்கு பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரை தமிழக மருத்துவர் ஆய்வு அறிக்கை!!


சென்னை, ஜூலை 3- கரோனா தொற்றுக்கு 2 ரூபாய் மதிப்பி லான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகளை நல்ல பலன் தருவதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவரின் ஆய் வில் தெரியவந்துள்ளது.


உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப் பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.அனைத்து நாடுகளும் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அவ்வப் போது இருக்கும் அறிகுறிக ளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப் பட்டுவருகிறது.


இந்நிலையில் கரோனா தொற்றுக்கு 2 ரூபாய் மதிப் பிலான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகளை நல்ல பலன் தருவதாக தமிழக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவரும் ஆராய்ச்சியாள ருமான வசந்த குமார் கரோனா வைரஸை அழிக்கும் மருந் துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, 50 ஆண்டுகால பழமை வாய்ந்த மாத்தி ரையான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகள் கரோனா பாதித்த நோயாளிகளுக்கு நல்ல பலனை தருவதாக ஆராய்ச்சி முடிவை வெளி யிட்டு உள்ளார்.


அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதித்தவர்க ளுக்கு பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகள் வழங்கப்பட்ட தாகவும் அது நல்ல பலன் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள மருத் துவர் வசந்த குமார், தமிழ் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்க ளுக்கு  பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகள் வழங்க வேண் டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment