பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் அமைச்சர் விளக்கம்..!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் அமைச்சர் விளக்கம்..!!

ஈரோடு, ஜூலை 1 இந்தியா முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி  முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப் பட்டதுடன் மாணவர் களுக்கு தேர்ச்சியும் அளிக் கப்பட்டுள்ளது.


இதனைப்போல், தமிழகத் திலும், முதலில் 1 முதல் 9ஆ-ம் வகுப்பு மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10ஆ-ம் வகுப்புப் பொதுத்தேர்வை அரசு நடத்த தீவிரமாக ஈடு பட்ட நிலையில், கரோனா தாக்கம் அதிகரித்தால், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர் வுகள், 11ஆ-ம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.


இருப்பினும், கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் மாதத்தில் திறந்து இருக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை மாதம் பிறந்த பின்னும் திறக் கப்படவில்லை. மாணவர் களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது தாமதமாகி வரு கிறது. இருப்பினும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தை குறைப்பதற் காக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.


இந்நிலையில், தமிழகத் தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் விளக்கம் அளித்துள்ளார்.  12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பிறகே முடிவுகளை வெளியிட முடியும். மீண்டும் பேருந்து இயக்கினால் மட் டுமே மாணவர்களை தேர்வு எழுத வைக்க முடியும் என்றார். மேலும், நிலைமை சரியான பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்; பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆக லாம். தற்போதைக்கு பள்ளி களை திறப்பதற்கான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment