மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனே விசாரிக்க வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்



புதுடில்லி, ஜூலை4, மருத் துவப்படிப்பு களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.


இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.


இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத் துவப்படிப்பு இடஒதுக்கீடு தொடர்பாக சலோனிகுமாரி என்பவர் உச்சநீதி மன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு வருகிற 8ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், வழக்கை வருகிற 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத் தரவிட்டது.  இந்தநிலையில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.


அதில், ‘உச்சநீதிமன்றத்தில் சலோனி குமாரி என்பவரால் மருத் துவப்படிப்புக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்குக்கும், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்குக்கும் தொடர்பு எதுவும் இல்லை. அந்த வழக்கில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.


எனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை வருகிற 9ஆம் தேதி வரை ஒத்திவைக்காமல் உடனடியாக விசாரிக்க உயர்நீதி மன்றத் துக்கு உத்தரவிட வேண்டும். இதர பிற்படுத் தப்பட்டோருக்கு மருத்துவப்படிப்பில் மத்திய ஒதுக் கீட்டில் இருந்து 50 சதவீத இடஒதுக் கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment