மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் வாழ்க! வாழ்கவே!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் வாழ்க! வாழ்கவே!!

98 ஆம் ஆண்டு காணும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன தலைவர் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் வாழ்க! வாழ்கவே!!



திராவிடர் இயக்கத்தில் மாணவப் பருவம் தொட்டு சுமார் 80 ஆண்டு களுக்குமேலாக, சுயமரியாதை வீரராக, அப்பழுக்கற்ற பெரியார் தொண்டராக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துவரும், பெரியார் அறக்கட்டளையான பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் மானமிகு தோழர் க.சண்முகம் அவர்கள் நாளை (2.7.2020) 98 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்!


திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்த காலந்தொட்டு திராவிடர் கழகத்தில் தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் ஆகியோரின் தலைமையின்கீழ் தொண்டறம் தொடர்ந்து, இன்றும் நம் போன்ற இளையர் களிடம் மாறாத அன்பும், பற்றுடனும் இயக்கத்தில் ஏற்ற பொறுப்புகள் எதிலும் சிறப்பான முத்திரை பதித்து வருப வருமான ‘க.ச.’ அய்யா அவர்கள் (அப்படித்தான் உள்ளூர் மக்கள் அழைப்பர்) மிசாவில் ஓராண்டு சிறை வாசம், பல போராட்டங்களில் சிறைவாசம் - இப்படிப்பட்ட தியாக வாழ்வின் புடம்போடப்பட்ட கொள்கைத் தங்கமான அவர் நல்ல உடல்நலத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்ந்து, அவரது 100 ஆவது ஆண்டு பிறந்த நாளை நாம் அனை வரும் மகிழ்ச்சியோடு கொண்டாடவும் விழைகிறோம்.


நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறோம்; 90 வயதைத் தாண்டிய நாத்திக பெரியார் பெருந்தொண்டர்கள், 101 வயதுள்ள பெங்களூர் தோழர் வீ.மு.வேலு அவர்களைப் போல பலரும் உள்ள நீண்ட பட்டியலே இருப்பது, இயக்கக் கொள்கையின் வலிமையை, பெருமையைக் காட்டுகிறது!


அனைவரும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில் மேலும் பாதுகாப்புடன் வாழவேண்டுமென கேட்டு நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்!


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


1.7.2020


 


No comments:

Post a Comment