இட ஒதுக்கீடு கோரி கடிதம் எழுதிய தலைவர்களுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

இட ஒதுக்கீடு கோரி கடிதம் எழுதிய தலைவர்களுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நன்றி

மருத்துவக் கல்விப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு கோரி கடிதம் எழுதிய தலைவர்களுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நன்றியைத் தெரிவிக்கிறோம்..


பிற்படுத்தப்பட்டோர்க்கு அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும், அதனை வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இப்பிரச்சினைக் குறித்து, காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றப் பிற்படுத்தப்பட்டோர் குழு உறுப்பினருமான ஜோதிமணி அவர்களுக்கு நன்றி.


மருத்துவக் கல்விப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங் களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஜூன் 10-ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிய திராவிடர் கழ கத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்களுக்கு எமது பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம்.


தங்கள்,


கோ.கருணாநிதி


பொதுச் செயலாளர்


No comments:

Post a Comment