ஆகஸ்ட் 16இல் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

ஆகஸ்ட் 16இல் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு


சென்னை, ஜூலை 3- கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான காலமும் கடந்துவிட்ட நிலையில், எப்போது கல்லூரிகள் திறக்கப்படும்? என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின்(ஏ.அய்.சி.டி.இ.) 62ஆவது கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டு, அதன்படி நாடுமுழுவதும் உள்ள தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம்? என்பது குறித்த தகவல்களை ஏற்கெனவே வெளி யிட்டு இருந்த அட்டவணைக்கு மாற்றாக, புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய அட்டவணை விவரம் வருமாறு:-


பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.


பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 2ஆம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மொத்தத்தில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க் கையை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும்.


ஏற்கெனவே பொறியியல் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கலாம்(பழைய அட்டவணையில் ஆகஸ்டு 1ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது). புதி தாக பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கலாம்.


தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை டிப்ளமோ மற்றும் முது நிலை சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்பு கள் ஜூலை 15ஆம் தேதி தொடங்கலாம். இந்த படிப்புகளில் மாணவர்கள் சேருவ தற்கு கடைசி தேதி ஆகஸ்டு 10ஆம் தேதி ஆகும். நடப்பாண்டு கல்விக்காலம் என்பது ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை இருக் கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்க வில்லை. இன்னும் ஒருவாரத்தில் அது தொடர்பாக ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றனர்.


No comments:

Post a Comment