குற்றவாளிகள்மீது உடனடியாகக் கொலை வழக்கு தொடர்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

குற்றவாளிகள்மீது உடனடியாகக் கொலை வழக்கு தொடர்க!

காவல்துறையின் மரியாதை- நன்மதிப்பு காப்பாற்றப்பட


வரம்பு மீறிய காவல்துறையினருக்கு உரிய தண்டனை தேவை!



 காவல்துறையினர்மீது மரியாதையும், நன்மதிப்பும் அவசியம் தேவையான ஒன் றாகும். இவற்றைச் சீர்குலைக்கும் காவல் துறையினர்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தருவது அரசின் கடமையாகும் என்று திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வணிகப் பிரமுகர்கள் ஜெயராஜ் (வயது 58), அவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31) ஆகி யோரை காவல் நிலையத்தில் வைத்து கடுமை யாகத் தாக்கி, மிருகத்தனமாக  நடந்துகொண் டனர். சித்திரவதைக்குப் பின்னர் விசாரணைக் கைதிகளாக இருந்த நிலையில் அவர்கள் உயி ரிழந்த சம்பவம் அப்பட்டமான சித்திரவதை யினால் ஏற்பட்ட அநியாயப் படுகொலை என்பது உலகறிய உண்மைகள் உலாவரத் தொடங்கிவிட்டன.


வரலாற்றில் அழிக்க முடியாத 


களங்கம்!


தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும், அத்துறை யைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல் வருக்கும் ஏற்பட்டுள்ள களங்கம் வரலாற்றில் எளிதில் அழிக்கப்பட முடியாத ஒன்றாகும்.


மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் மாண்பு மிகு நீதிபதிகள் அமர்வு, நடுவர் விசாரணை செய்வதைத் தடுப்பதற்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் தன்னிடம் உள்ள அனைத்து அதி காரத்தையும் பயன்படுத்துகிறது என்று தாங் களாகவே முன்வந்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது  எதைக் காட்டுகிறது? அத்துறை யில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் குற்றம் புரிந்து, அதைச் சாமர்த்தியமாக மறைக்க அனைத்து முயற்சிகளையும் கையாண்டதோடு, விசாரணைக்கு வந்த மாஜிஸ்திரேட்டுக்கு ஒத் துழைப்பு அளிக்கவில்லை; அதோடு, அவரைக் கொச்சையாகப் பேசி, கேட்ட தடயங்களைத் தரவும் மறுத்து, அதீதமாக நடந்துகொண்டது எந்த தைரியத்தில்,  யார் தைரியத்தில்? என்பதே நாட்டு மக்களின் கேள்வி!


காவல்துறையினரை மாற்றுவது


தகுந்த நடவடிக்கையா?


காவல்துறையைத் தனது கையில் வைத்தி ருக்கும் முதலமைச்சர், ‘‘உடல்நலக் குறைவால் அவ்விருவரும் இறந்துவிட்டார்கள்'' என்று கூறியது எவ்வகையில் நியாயம்? அதேபோல், அம் மாவட்ட அமைச்சர் ஒருவர் ‘‘காவல் நிலை யத்தில், லாக் அப் மரணமல்ல அவை'' என்ற ஒரு விநோத  வியாக்கியானம் தந்ததும் யாரைப் பாதுகாக்க? அங்கிருந்த காவல்துறை கருப்பு ஆடுகள் (அல்ல, அல்ல - ஓநாய்கள்போல்) நடந்துகொண்டதும், காலந்தாழ்ந்த நடவடிக் கையாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த ஒட்டுமொத்த காவல்துறையினரை மாற்றியது மட்டுமே  அதற்குப் போதிய சட்ட நடவடிக்கையாகுமா?


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு நீதிபதிகளின் உத்தரவுப்படி,  நீதிக் கண்காணிப்பு எந்த அளவுக்குத் தேவைப்பட்டு இருக்கிறது என்றால், சாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியர் (தாசில்தார்), நேரடிக் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டு இயங்குகின்ற  - இதுவரை நாட்டிலேயே நாம் கேள்விப்பட்டிராத ஓர் அதிர்ச்சிக்குரிய புதிய முன்மாதிரி  (New Precedent) ஏற்பட்டுள்ளது - தமிழ்நாட்டு காவல்துறைக்கும், அதனை நிர்வகிக்கும் முதலமைச்சருக்கும் ஏற்பட்ட கருப்புப் புள்ளியல்லவா!


உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க முன்வரவேண்டும்


கொலை வழக்குப் பதிவு செய்வதோடு நிறுத்திவிடாமல், குற்றவாளிகளான அக் காவல் துறை அதிகாரிகள்மீதும், தயவு தாட்சண்யம் காட்டாமல் உடனடியாக தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்கத் தாமதமின்றி முன்வர வேண்டும். அப்போதுதான் காவல்துறையின் மீதும், ஆட்சியின்மீதும் நம்பிக்கை ஏற்படும்.


சி.பி.அய். விசாரணை தொடங்குமுன் தமிழ் நாடு அரசின் சி.பி.சி.அய்.டி. பிரிவு இதுபற்றி முழு விசாரணையைத் தொய்வின்றி நடத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை அமர்வு) ஆணையிட்டுள்ளதால், அதன்படி கொலை வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துதல் அவசரம், அவசியம்!


எச்சரிக்கையுடன் ஆவணங்கள்


பாதுகாக்கப்பட வேண்டும்


பொய்யான முதல் தகவல் அறிக்கை பதி வாகியிருக்கிறது என்கிற நடுவரின் அறிக்கை யின்மீதும் சரியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படல் வேண்டும். உரிய ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண் காணிப்பின்கீழ் இயங்கும் காவல்துறையினரால் சரியான முறையில் பாதுகாக்கப்படவேண்டும். வழக்கமாக இதுபோன்ற பரபரப்பு வழக்குகளில் ஆவணங்கள் காணாமற்போவதும், ‘திடீரென்று தீ ஏற்படுவதும்' முன்னர் பலமுறை ஏற்பட்ட நிகழ்வுகள். எனவே, போதிய எச்சரிக்கையுடன் ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.


ஒத்துழைப்புத் தந்து உண்மையை அச்சத் தோடு கூறிய காவலர் திருமதி ரேவதி, சாட்சிப் பதிவில் கையெழுத்திடத் தயங்கிய அவருக்குப் பாதுகாப்பு அளிப்பது உறுதி என்று தெரிந்த பிறகே, கையொப்பம் இட்டுள்ளார் என்பதால், அவருக்குப் போதிய பாதுகாப்புத் தரத் தவறக்கூடாது.


ஒரு நடுவரை- அதுவும் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கு என்று தெரிந்த நிலைக் குப் பிறகும், அங்குள்ள காவல்துறையினர் சிலர், ஒருமையில் பேசி கொச்சைப்படுத்தியது எவ் வகையில் ஏற்கத்தக்கது! காவல் துறையின் மீதுள்ள மதிப்பும், மாண்பும் இழக்கச் செய்யும் இழிசெயல் அல்லவா ?


அரசுமீது நம்பிக்கை இழக்கும்


நிலை ஏற்படலாமா?


காவல்துறையின் மரியாதை, நன்மதிப்பு நாட்டில் உள்ளபடியே காப்பாற்றப்படவேண்டு மானால், இத்தகைய சிலரின் வரம்பு மீறிய சட்ட விரோத பேச்சுக்கு உரிய தண்டனை அளிக்கப் பெற்று, நீதி, நியாயம் பாதிக்கப்பட்டோருக்குக் கிடைக்கச் செய்வதுதான் சரியான வழிமுறை யாகும்.


இதுவே இனி வருங்காலத்தில் காவல் துறையைச் சார்ந்த எவரும்  இம்மாதிரி இழி செயல்களை நினைக்கவோ, செய்யவோ கூடாத அளவிற்குச் சரியான பாடமாக அமையும்.  உரிய முறையில் கடமையாற்றி காவல்துறையின் மரியாதையைக் காப்பாற்றி,  மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்!


முதலமைச்சரும் மற்றும் அமைச்சர்களும் இது போன்ற வழக்குகளில் யாரையும் பாது காக்கக் கூடிய வகையில் பதிலளிப்பது, அப் பதவியின் மாண்பை ஒருபோதும் காப்பாற்றுவது ஆகாது.


மக்களுக்கு அரசுமீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாமா?


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


1.7.2020


 


No comments:

Post a Comment