பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி திராவிடர் கழக தோழர் தி.க.ரவி (வயது 53) உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
வாழ்விணையர் பெயர் அனிதா. மகள்கள் பேரொளி, பேரறிவு, ஆகிய இரு பெண் குழந்தை கள் உள்ளனர். பொள்ளாச்சி நகர கழக முன்னாள் பொறுப்பாளராகவும் சமுக காப்பு அணியில் பயிற்சி பெற்றவராகவும், ஆசிரியர் அவர்களின் மெய் காப்பாள ராகவும் பணியாற்றியவர்.
ஜமீன் ஊத்துக்குளியில் 5.6.2020 அன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதி நிகழ்வில் கோவை மாவட்ட கழக தலை வர் ம.சந்திரசேகர் தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் இறுதி மரியாதை நிகழ்வில் பங் கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
குறிப்பு: தோழர் ரவி அவர்களின் மறைவு செய்தி அறிந்த கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் பொள்ளாச்சி பொறியா ளர் தி.பரமசிவம் அவர் களை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment